மழை வேண்டி தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு



பழையனுார்; பழையனுார் அருகே ஓடாத்துார் ஸ்ரீசிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு நடந்தது. வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் மழை வேண்டி கிராமங்கள் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஓடாத்தூர் தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வேளார் தெருவில் குதிரைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நேர்த்திகடன் விரதமிருந்து புரவிகளை சுமந்து வந்தனர். குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த பெண்கள் நேர்த்திகடன் பொம்மைகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்