திருநீலகண்டபுரம் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் விழா நிறைவு



திருப்பூர்; திருநீலகண்டபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோவிலில், 55ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி துவங்கி நடைபெற்றது. 10ம் தேதி, தீர்த்த ஊர்வலம், சலங்கை ஆட்டம், இரவில் அம்மை அழைத்தல் நடைபெற்றது. நேற்று காலை, பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். பொங்கல் வைக்கப்பட்டது. நிறைவு நாளான இன்று மதியம், மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. காமாட்சி அம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 3:00 மணிக்கு, மேள தாளம் முழங்க, காமதேனு வாகனத்தில், அம்மன் வீதியுலா வந்தார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்