சிவகங்கை; பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்செரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் 71வது ஆண்டு பூச்சொரிதல் விழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று (4ம் தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஜூலை 9ம் தேதி காலைஏகதின லட்சார்ச்சனையும், ஜூலை 11ம் தேதி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற உள்ளன. தொடர்ந்து அன்று மாலை பிரசித்தி பெற்ற பூச்சொரிதல் விழா நடக்க உள்ளது.