சுமங்கலிகளுக்கு மங்கல பொருள் வழங்கிய ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள்



கோவை; கோதண்டராமரை ஆடிவெள்ளியில் வழிபட வந்த சுமங்கலி பெண்களுக்கு  பூஜித்த சேலை, உள்ளிட்ட  மங்கல பொருட்களை வழங்கினார் ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள்.


ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் வீற்றிருந்து ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹா ஸ்வாமிகள் சாதுர் மாஸ்ய விரதம் மஹோத்ஸவம் மேற்கொண்டுள்ளார். அவரது ஜென்ம நட்சத்திர தின விழா மற்றும் ஆடிமூன்றாவது வெள்ளியான நேற்று  அம்பாளுக்கும் சந்திரமவுலீஸ்வரருக்குமான சிறப்பு வழிபாடுகளை நிறைவு செய்த பின்பு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் அப்போது கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு சேலை, ரவிக்கை, தேங்காய், பழம், வளையல் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை வழங்கினார்.  நுாற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் சுவாமிகளிடம் ஆசிபெற்று பெற்றுக்கொண்டனர். உலக ஷேமத்துக்கு லோகமாதாவை வழிபட வேண்டும். அதை சுமங்கலி பெண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்