திருவாரூர்: விஜயதசமியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் தேவிக்கு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. துர்கா பரமேஸ்வரியாய், ராஜலஷ்மியாய் மஞ்சுளவாணியாய் ஆதி அம்பிகை நவலோகமும் இயங்கும் மதுரபாஷினியை நவராத்திரி 9 நாட்கள் வந்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு அம்பாளுக்கு மகாஅபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.