செஞ்சி; செஞ்சி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேசபெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து தங்க கவச அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி கோட்டை வெங்கரட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்காரமும் செய்தனர். பஜனை கோஷ்டியினரின் பஜனைய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.