கடலுார்; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, கடலுார் பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை, வைகுண்ட நாயகி, ஹேமபுஜ வல்லி தாயார் சமேத தேவநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போன்று, புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், ஜட்ஜ் பங்களா சாலை கஜேந்திர வரதராஜ பெருமாள், அரிசி பெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.