கோவை; தீபாவளியை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் சண்முகம் ரோடு - ராமச்சந்திரா ரோடு சந்திப்பில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் தங்கக் காப்பு கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.