பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மழையில் பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். பழநி கிரிவீதியில் ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் காவடி தீர்த்த காவடி மற்றும் அலகு குத்தி வந்தனர். ஈரோடு மாவட்டம், பவானி, உரக்கடத்தை சேர்ந்த பக்தர் பறவை அலகு குத்தி வந்தார். குடமுழுக்கு மண்டபத்தை மூலம் யானை பாதை அடைந்து மலைக்கோயில் சென்றனர்.