கோவை; மார்கழி மாதம் விசாகம் நட்சத்திரம் மற்றும் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் மூலவர் முருகன் சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.