அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தங்க தேரோட்டம் நேற்று நடந்தது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தங்கத்தேர் அமைக்கப்பட்டது. முதன்முதலாக தேரோட்டம் நேற்று இரவு 7:00 மணிக்கு துவங்கியது. கோயில் உள்பிரகாரத்தில் தேரோட்டம் நடந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தேர் மின் விளக்குகளால் ஜொலித்தது. கோவில் உட்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது. பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்கினார். அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கரன் உள்பட 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதியம் மற்றும் இரவு பல ஆயிரம் அன்னதானம் வழங்கப்பட்டது. நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். வள்ளி தெய்வானை சமேதர முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இனி ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நாளன்று இரவு தங்க தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் விரும்பும்போது 3,000 ரூபாய் நன்கொடை செலுத்தினால் தங்கத்தேர் இழுக்கலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.