சக்தி மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்



திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டு விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.


காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்கள் பால்குடம் எடுத்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் உள்ள வழியாக சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


பகல் 1:30 மணிக்கு அம்மனுக்கு சோடசோபச்சார தீபாராதனை நடந்தது.


மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது. கோவில் நிர்வாகி சக்திவேல், தொழிலதிபர்கள் தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், சாந்திபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்