பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வாழவந்த முத்துமாரியம்மன் கோயில் 37ம் ஆண்டு பங்குனி விழா நடந்தது. கோயிலில் மார்ச் 29 அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஏப்., 5 பொங்கல் விழா, பட்டு சாத்துதல், ஆயிரம் கண் பானை, கரும்புத்தொட்டி எடுக்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து பூச்சொரிதல் விழாவில் பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். மறுநாள் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. ஏப்., 7 பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பால் அபிஷேகம் நடந்து, இரவு முளைப்பாரி விழா தீபாராதனைகள் நடந்தன. நேற்று இரவு உற்சவ சாந்தி மற்றும் பைரவர் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.