திருவாடானை: திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் வாழவந்த நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருள்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்மன் வீதி உலா நடக்கிறது.