பழநி: பழநியில் தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் பராபவ ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது.
பழநி கலையம்புத்தூர், அக்ரஹாரம் பகுதியில் தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் பராபவ ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது. அதன் பின் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. தாம்ப்ராஸ் சங்க மாநில துணைத்தலைவர் ராஜ்மோகன் தலைமையில் பிரம்மஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெளியிட முருகனடிமை பாலசுப்பிரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சி மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீரங்கம் வரதராஜ அய்யங்கார், மாநில பொருளாளர் அனந்தசுப்பிரமணியம், மாநில ஆலோசகர் வைத்தியநாதன் கோவை மாவட்ட தலைவர் லட்சுமிவெங்கட்ராமன், கோவை மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கட்நாராயணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.