சித்திரை பெருவிழாவை முன்னிட்டு வேதகிரீஸ்வரர் கோவில் புனரமைப்பு



 திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவை முன்னிட்டு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் 20ம் தேதி, சித்திரை பெருவிழா உத்சவம் துவங்குகிறது. அதை முன்னிட்டு, கோவில், தீர்த்தக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் துாய்மை கருதி, தன்னார்வலர்கள், கோவில் நிர்வாக அனுமதியுடன், உழவாரப் பணி குழுவினரை ஈடுபடுத்தினர்.

சென்னை சிவனடியார் திருக்கூட்டம், திருப்பூர் உழவாரப்பணிகள் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த 500 பேர், மலைக்கோவில் பூஜை பொருட்களை சுத்தம் செய்து, படிப்பாதை பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பையை அகற்றி அப்புறப்படுத்தினர்.சங்குதீர்த்தகுளத்தில் தேங்கியிருந்த, பாலிதீன் பை உள்ளிட்ட குப்பை, நீராழி மண்டப புதர் ஆகியவற்றை அகற்றினர். குளத்தின் சுற்றுச்சுவருக்கு வெள்ளை, காவி தீட்டி, சிவ சிவ என எழுதினர். பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், நந்தவன தோட்டம், கோசாலை பகுதிகளில் குப்பை அகற்றி துாய்மைப்படுத்தினர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்