காரைக்கால்: காரைக்கால் தக்களூர் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள தருமபுரம் தக்களூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 152ம் ஆண்டுத்திருவிழாவை முன்னிட்டு நேற்று பங்குத்தந்தை பால்ராஜ் குமார் தலைமையில் கொடியோற்றம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கொடிக்கு சிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டு பின் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக சென்று பின் ஆலயத்தை வந்தடைந்தது. தினம் சிறப்பு திருப்பலி நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 18ம் தேதி ஐந்து பெரிய தேர்பவனி நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான கிருஸ்துவமக்கள் கலந்து கொண்டு செபஸ்தியாரை வழிப்பட்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.