ஆவிச்சிபட்டி மந்தையம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் மாவிளக்கு



நத்தம்: நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் மந்தையம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அம்மன் பூந்தேரில் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, கிடாய்கள் வெட்டி நேர்த்தி கடன்களை செலுத்தினர். இன்று மாலை பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்