பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 50வது ஆண்டு பிரமமோற்சவம்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 50வது ஆண்டு பிரமமோற்சவம் வரும், 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அனுக்ஞை, விச்வக் ேஷனாராதனம், புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 23ம் தேதி காலை, 7:35 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 24ம் தேதி முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ஒவ்வொரு வாகனங்களிலும், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 29ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருப்பல்லக்கில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 30ம் தேதி தவழ்ந்த கிருஷ்ணன், வெண்ணெய்தாழி திருப்பல்லக்கிலும்; மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், மே 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஏளப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தலும், மாலை, 6:00 மணிக்கு திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், மே 2ம் தேதி தீர்த்தவாரி, 3ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமுதவள்ளி, அறங்காவலர் குழு தலைவர் மணிகண்டன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்