பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 50வது ஆண்டு பிரமமோற்சவம் வரும், 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அனுக்ஞை, விச்வக் ேஷனாராதனம், புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 23ம் தேதி காலை, 7:35 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 24ம் தேதி முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ஒவ்வொரு வாகனங்களிலும், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 29ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருப்பல்லக்கில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 30ம் தேதி தவழ்ந்த கிருஷ்ணன், வெண்ணெய்தாழி திருப்பல்லக்கிலும்; மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், மே 1ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஏளப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தலும், மாலை, 6:00 மணிக்கு திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், மே 2ம் தேதி தீர்த்தவாரி, 3ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமுதவள்ளி, அறங்காவலர் குழு தலைவர் மணிகண்டன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.