திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உத்சவம்: புஷ்ப பல்லக்கில் அம்மன் உலா



திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, தனி சன்னதியில் வட்டப்பாறை அம்மன் அருள்பாலிக்கிறார். பங்குனி – சித்திரை மாதங்களில், வட்டப்பாறை அம்மன் ஏழு நாள் உத்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு உத்சவம், 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்ப பல்லக்கு, நேற்று இரவு நடந்தது. அரளி பூ மாலை அணிந்து, புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘ஓம் சக்தி... பராசக்தி’ என, விண்ணதிர முழங்கியபடி சுவாமி தரிசனம் செய்தனர். புஷ்ப பல்லக்கு, சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகளில் வலம் வந்து, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை – சன்னதி தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது. இன்று கதம்பம் பூ மாலை அணிந்து, இந்திர விமானத்தில் வட்டப்பாறை அம்மன் எழுந்தருளி மாடவீதி உத்சவம் நடந்தது. தொடர்ந்து, கொடியிறக்கத்துடன், ஏழு நாள் உத்சவம் நிறைவடைந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்