காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஸ்ரீ சோமநாதர் கோயில் மீதான தாக்குதல் நடந்து 1000 ஆண்டுகள் (கி.பி. 1026) நிறைவடைந்ததையும், கோயில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் (1951) ஆனதையும் முன்னிட்டு, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து, "சோமநாத் ஸ்வபிமான் பர்வ (ஆயிரம் ஆண்டுகள் நிறைவு விழா) அகண்ட விஸ்வாசம்" என்ற பெயரில் நினைவு விழா நடத்தப்பட்டது . இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தர்ம பிரச்சார ரதம் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்தது. பிரச்சார ரதத்துடன், கலைஞர்களின் பஜனைகள், கோலாட்டங்கள், சிவசேவைகர்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் கோயிலின் பஜந்திரிகளுடன் இணைந்து ஓம் கார கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து சோமநாதேஸ்வர சுவாமியின் படம் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள கலாச்சார கலை அரங்கில் சோமநாதேஸ்வர சுவாமியின் உருவப்படம் ஏற்பாடு செய்யப்பட்டு, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்களால் தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்களால் ஓம்கார ஜபம், சோமநாத சங்கல்பம் மற்றும் சோமநாத கீதை ஆகியவை பாராயணம் செய்யப்பட்டு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, ஸ்ரீ சோமநாதர் கோவிலில் இருந்து தேசிய நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு, அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத், உறுப்பினர்கள் குர்ரப்ப செட்டி, கோயில் அதிகாரிகள் ஹேமாவதி, என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, சீனிவாசராஜூ,.வித்யாசாகர் ரெட்டி, லோகேஷ்பாபு, ஹேமமாலினி, மேற்பார்வையாளர்கள் ஸ்ரீஹரி, ரவி, விஜய சாரதி, தலைமை அர்ச்சகர்கள் சம்மந்தம் குருக்கள், கருணாகர் குருக்கள் மற்றும் வேதப் பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.