திருமலையில் அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்; பக்தர்கள் பரவசம்



திருப்பதி: திருமலையில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமிக்கு காலையில் அபிஷேகம் உட்படபல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


வைசாக மாதத்தின் பஹுள தசமி (தேய்பிறையின் பத்தாம் நாள்) திருமலைத் திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மரபுப்படி மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி விழா, இந்த ஆண்டு இன்று (மே 12ம் தேதி) நடைபெற்றது. அனுமன் ஜெயந்தித் திருநாளையொட்டி, ஸ்ரீவாரி கோயிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமிக்கும், திருமலைக்குச் செல்லும் நடைபாதை மார்க்கத்தில் 7-வது மைல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமிக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தத்திலும் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மங்களகரமான நன்னாளில், மரபின்படி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ ஜபாலி அனுமனுக்குப் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கையா சவுத்ரி ஜபாலி ஹனுமானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். மேலும், முதல் மலைப்பாதை வழியாகச் செல்லும் வழியில், 7-வது மைல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமியின் முழு உருவச் சிலைக்கு, அதே நாளில் பிற்பகல் 3:00 மணிக்கு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதையொட்டி, பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வசதிக்காக, காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இலவசப் போக்குவரத்து வசதியை திருப்பதி வழங்கியுள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்