கோவை : சித்திரை மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின்நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
*கோவை காட்டூர் அனுப்பர்பாளையம் கடலூர் மாரியம்மன் கோவில் 63 -ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது இதில் சித்திரை மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.