சென்னை: வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
வேளச்சேரி கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பல்லவர் மற்றும் சோழர் கால கட்டடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. இக்கோவில் பிரம்மோத்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காப்பு கட்டுதலுடன் பக்தர்களின் சிவ நாமம் விண்ணை பிளக்க கொடியேற்றப்பட்டது. பின், சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது. இன்று மாலை, முதல் கால யாகசாலை பூஜைகள், சிம்ம வாகனத்தில் சோமாஸ்கந்தர் புறப்பாடு நடந்தது இன்று சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, நாளை காலை 6:30 மணிக்கு அதிகார நந்தி சேவை, 26ல் காலை 6:30 மணிக்கு தேர் திருவிழா, 29ல் மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. வரும், 30ம் தேதி தெப்பத் திருவிழா நடக்க உள்ளது.