திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா



 திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா இன்று விமர்சையாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடப்பது வழக்கம். அந்த வகையில், பிரதோஷத்துடன் வைகாசி கிருத்திகை விழா விமரிசையாக இன்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வர தொடங்கினர். தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் திருவீதியுலா மாடவீதிகளில் நடந்தது. முன்னதாக நேற்று இரவும், பரணி உத்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்