அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் கிருத்திகை பூஜை; தங்க தேரோட்டம்



அன்னுார்: கிருத்திகையை முன்னிட்டு, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று தங்க தேரோட்டம் நடந்தது.

அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், ரூ.2.50 கோடியில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. பிப்., 1ம் தேதி தேரோட்டம் துவங்கியது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று தேரோட்டம் நடக்கிறது. இன்றிரவு 7:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கல்யாணசுப்பிரமணியசாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிங்கப்பெண் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்