உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவிலில், புதிதாக அம்மன் சிலை வைத்து, இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 25ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், நேற்று முன்தினம் யாக பூஜைகளும், அன்று இரவு புதிய அச்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 10:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு 10:30 மணிக்கு புதிய சிலை மீது புனிதநீர் ஊற்றி மஹா கும்பிாபிஷேக விழா நடைபெற்றது.