பராமரிப்பின்றி திருவாலீஸ்வரர் கோவில் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்



காஞ்சிபுரம்: சிங்காடிவாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் பராமரிப்பு இல்லாமலும், குளத்தை துார்வாரி சீரமைக்கவும் வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கத்தில் திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தினமும் நித்யபூஜை நடைபெறுகிறது. பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் சுவர் மற்றும் கோபுரத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. கோவில் எதிரில் உள்ள சப்த ரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளம் துார்ந்த நிலையில் உள்ளது. எனவே, சிங்காடிவாக்கம் திருவாலீஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், குளத்தை துார்வாரி சீரமைக்கவும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்