வடபழனி முருகன் கோவிலில் பேட்டரி கார் சேவை துவக்கம்



சென்னை; வடபழனி முருகன் கோவிலுக்கு வரும் மூத்தகுடி பக்தர்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்களின் வசதிக்காக நன்கொடையாளரால் வழங்கப்பட்ட பேட்டரி கார் சேவையை அமைச்சர் ஆனந்த் நேற்று துவக்கி வைத்தார்.


சென்னை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். இக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வார விடுமுறை விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.  பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மூத்த குடி பக்தர்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை நேற்று துவங்கியது.  ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேட்டரி கார் சேவையை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணைக் கமிஷனர் மோகனசுந்தரம், கோவில் துணைக் கமிஷனர் லட்சுமி, அரசு கொறடாவும், விருகம்பாக்கம் எ.எல்.ஏ.,வுமா சபரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


ஆறு இருக்கைகள் கொண்ட இந்த இலவச பேட்டரி கார் சேவை ஆண்டவர் சாலை நுழைவாயிலில் இருந்து கோவில் நுழைவாயில் வரையிலும், கார் பார்க்கில் பகுதியில் கோபுர நுழைவாயில் வரையிலும் செயல்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், ஷட்டில் கார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனருமான சங்கர் வடபழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு இலவச சேவைக்காக, 11லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு பேட்டரி கார்களை வழங்கியுள்ளார்.  பேட்டரி கார் ஓட்டுநர்களுக்கான ஊதியம், பராமரிப்பு தொகையும் அந்நிறுவனமே மேற்கொள்கிறது. மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி, கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அழைத்து செல்லப்படுவர். இச்சேவை வாயிலாக தினசரி ஆயிரம் பக்தர்கள் பயன் பெறுவர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்