சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கேரளாவில் இருந்து காஞ்சி வருகை



காஞ்சிபுரம்: கேரள மாநிலத்தில் மேற்கொண்ட தொடர் ஆன்மிக பயணங்களையும், மக்கள் வழிபாட்டு நிகழ்வுகளையும் நிறைவு செய்த, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு நேற்று வந்தடைந்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரர், கடந்த 13ம் தேதி புறப்பட்டு தமிழகத்தில் உள்ள விழுப்புரம், பழனி, சேலம், திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று காலை காஞ்சிபுரம் சங்கர மடம் வருகை புரிந்த சுவாமிகளுக்கு, சங்கரமடம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மகா பெரியவர் பிருந்தாவனத்தில் சிறப்பு துாப தீப ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தார் . நிகழ்வில், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர் கௌரிசங்கர் குடும்பத்தினரால் மொத்தம், 225 கிராம் எடையுள்ள இரண்டு தங்க காசு மாலைகள் மகா பெரியவர் மற்றும் ஜயே ந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அணிவித்தார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்