கூடலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை



கூடலுார்: கூடலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் குழுவினர் அம்மன் பாடல்கள் பாடினர். பெரியகுளம் கிருஷ்ண சைதன்ய தாஸ் சுவாமி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்