திண்டிவனம் பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா



திண்டிவனம்: பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நடந்த உறியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஜென்மாஷ்டமி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 8:30 மணிக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு தோறும் வெண்ணெய் எடுக்க புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து இரவு 7:30 மணியளவில் கோவில் முன்பு உறியடி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் யாதவ மகா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்