வைத்தியநாதசுவாமி கோவிலில் சனிபிரதோஷ சிறப்பு வழிபாடு



திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில், சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

சனி பிரதோஷத்தையாட்டி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் நந்தி பகவானுக்கு பால், இளநீர், சந்தனத்தால் அபிஷேகம் நடந்தது. பின் நந்தி பகவானுக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. உற்சவர், கோவிலைச்சுற்றி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நூற்றுகணக்கான பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். வைத்தியநாதசுவாமி, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்