சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி; பக்தர்கள் வெள்ளத்தில் திணறியது திருவண்ணாமலை



ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமயை முன்னிட்டு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வெள்ளத்தால் திருவண்ணாமலை திணறியது.


நேற்று இரவு 11 மணி முதல் மலையடிவாரத்தில் பக்தர்கள் குவியத் துவங்கினர். நள்ளிரவு 1:00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாத பூஜைகள் நடந்தது. பின்னர் இரவு 2:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். இன்று மாலை 5:00 மணி வரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.. திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் ஆண்டாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்ததால் கோயிலிலும், மாட வீதிகள், ரதவீதிகள் மட்டுமின்றி நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி‌. ராஜா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்