ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 3ம் நாள் மாசி சிவராத்திரி விழாவான இன்று காலை 6:30 மணிக்கு கோயிலில் இருந்து ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி கோயிலுக்கு திரும்பினர். இதனால் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.