சிவகாசி; வேதாந்தம் சுவாமி கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் சிவகாசி சுப்பிரமணியபுரம் காலணியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் அழகுராஜா, கோயில் பூசாரி குருசாமி, கைலாசம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. துாத்துக்குடி அமைப்பாளர்கள் மூக்கையா, மாரியப்பன், பெரியசாமி, துணை அமைப்பாளர் ஈஸ்வரன், பாலமுருகன், நிர்வாகி குருநாதன், பக்தர்கள் கலந்து கொண்டனர்.