திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு திருக்கல்யாணம்



திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமசுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சைத்ரோத்ஸவ விழா கோலாகலமாக நடக்கிறது. மே 3ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று இரவு 7:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர், சீதா பிராட்டியாருக்கு திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது. தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் பரப்பப்பட்டிருந்தன. யானை வாகனத்தில் பட்டாபிஷேக ராமர் வீதி உலா வந்தார். மே 11ல் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்