கோவில்களில் வைகாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு



கோவை; உக்கடம், கோட்டைமேடு பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் துவாதசி திதி மற்றும் வைகாசி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருவீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். 


* வைகாசி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்