கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த ஏகாதசி உற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று மாலை பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.