திருத்தங்கல் கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்



சிவகாசி; திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாத சுவாமி திருக்கோயில் பழனியாண்டவர் சன்னதியில் கந்த சஷ்டி திருக்கல்யாண விழா காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி ரத வீதியில் தங்கரத பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமிகள் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். அக். 28 ல் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்