கூடலுார்: கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
கூடலுார் தாமரைக்குளத்தில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஈஸ்வரன் கோயில் உள்ளது. சேதமடைந்த திருக்கோயிலை சீரமைக்க தொடர்ந்து பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் கோயிலில் சிறப்பு பூஜை, விளக்கு பூஜை, அன்னதானம் என தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மக்கள் வளம் பெறவும், மழை பொழிந்து விவசாயம் காக்கவும் கோயில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. வாஸ்து ஹோமம், கைலாய வாத்தியம், திருமுறை பாராயணம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவ பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.