குருபெயர்ச்சி; திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்



தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று (26ம் தேதி) குரு பெயர்ச்சியால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றி தலம். இத்தகையை சிறப்பு பெற்ற கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும். அதன்படி இந்தாண்டு குருபகவான், இன்று ( மே 26ம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி  அபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம்,துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவும், ஜூன் 3ம் தேதி ஒரு நாள் லட்சார்ச்சனையும்,  ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்