ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு வழிபாடு



திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.

அன்றைய தினம் காலை, 11:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, சங்கல்பம், மஹா மந்திர வழிபாடு, மூலமந்திர ேஷாமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் ஆவுடையநாயகி அம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது. சிவா ச்சாரியார்கள், 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் செய்தனர்.

பகல், 1:00 மணிக்கு, சிறப்பு அலங்காரபூஜை, உபசார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது; ஏராளமான பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். தொடர்ந்து, இரவு, 8:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்