பரமக்குடி ஐயப்பன் கோயிலில் உத்திர நட்சத்திர அபிஷேகம்



பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உத்திர நட்சத்திர அபிஷேகம் நடந்தது. ஐயப்பன் அவதரித்த உத்திரம் நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதன்படி நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவருக்கு சந்தனம், பால், பன்னீர் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் தரிசித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்