பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஏகாதச ருத்ர ஜெப ஹோமம்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், உலக நலன் வேண்டி, ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் நடந்தது.


பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் இன்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கி மதியம், 12:00 மணி வரை நடந்தது. பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுந்தரேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உலகம் நலம் பெற வேண்டும்; மழை பொழிவு கிடைத்து நீர் நிலைகள் நிரம்ப வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக ேஹாமம் நடைபெற்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்