புதுச்சேரி: வாழைக்குளம் செங்குழுநீர் அம்மன் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி, வாழைக்குளம், அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் 98ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினசரி அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மதியம் 1.00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு 1:00 மணிக்கு தெப்ப உற்சவம், நாளை மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.