கோவை; ஆடி மாதம் ஆஷாட ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி சாய் நகர் பாண்டுரங்கன் ருக்மணி தியான மந்திரில் சுவாமி ஜெகன்னாதர் மற்றும் சுபத்ரா பல தேவி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ருக்மணி பாண்டுரங்கன் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விசேஷ பஜனை மற்றும் பாகவத பஞ்சகீதங்கள் அபங் பஜன் ஆகியன நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.