கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அம்மன் கோவில்: பக்தர்கள் அதிருப்தி



திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, தனி நபர்கள் சிலர் கட்டி வரும் அம்மன் கோவில் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அமைந்துள்ள வேதமலைக் குன்றுகள் 3 கி.மீ., சுற்றளவு கொண்டது.

இந்நிலையில், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர்கள் சிலர் 20 ஆண்டுகளுக்கு முன், ஆக்கிரமித்து அம்மன் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர்.

இதற்கு வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லை; அதிகாரிகளும் மவுனம் காத்து வருகின்றனர்.

மேலும், அ.தி.மு.க., மாவட்ட செயலரின் ஒத்துழைப்புடன், ஆக்கிர மிப்பு கோவிலை விரிவுப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

எனவே, வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் இந்த கட்டுமானப் பணிகளை தடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்