தேவகோட்டை: -: தேவகோட்டை நித்திய கல்யாணிபுரம் வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி பூஜை நடந்தது.
நிறைவு நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காய்கனி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் விரதமிருந்து வாராஹியை தரிசனம் செய்தனர்.
வெளிமுத்தி விலக்கு பட்டு குருக்கள் நகர் அத்தி வாராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு அத்தி வாராஹிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.