பெரியகுளம்; பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணன் ஜெயந்தி 4 ம் நாள் விழாவை முன்னிட்டு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணர், ராதைக்கு துளசி, முருகு, முல்லை, மல்லி, ரோஜா பூ, சம்பங்கி ஆகிய வண்ணமலர்கள் கோவிந்த நாமம் கூறிபட்டாபிஷேகம் நடந்தது. முரளிதரசுவாமி சீடர் சீனிவாசன் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மைய பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.